×

ஆதரவு கேட்டு மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்

பட்டுக்கோட்டை, ஜன. 8: மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் இன்று நடக்கிறது. பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஊர்வலமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு நகரில் பல இடங்களில் நேற்று பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.தொமுச தஞ்சை மாவட்ட கவுன்சில் செயலாளர் சேவியர் தலைமையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள், அரசியல் கட்சியினர், தொழிலாளர் தோழர்கள் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டு கொண்டனர். அதைதொடர்ந்து பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு பொதுமக்களிடத்தில் ஆதரவு கேட்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலை, மணிக்கூண்டு, அறந்தாங்கி ரோடுமுக்கம் காந்தி சிலை, தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடந்தது. தெருமுனை கூட்டம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளை தொமுச பன்னீர்செல்வம் ஒருங்கிணைத்தார்.

Tags :
× RELATED அரசு பள்ளி தொடர்ந்து 12வது ஆண்டாக 100 சதவீதம் தேர்ச்சி