×

பெண்ணுக்கு கொலை மிரட்டல் வாலிபர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஜன.8: பூதலூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பூதலூர் கோவில்பத்துவை சேர்ந்த சுரேஷ் மனைவி ஜோதி (34). இவரை நேற்று (7ம் தேதி) காலை அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் பூவேந்திரன் (எ) குமரேசன் (22) தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பூதலூர் காவல் நிலையத்தில் ஜோதி புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிந்து குமரேசனை கைது செய்தார்.

Tags : murder ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...