×

திறந்தவெளி பாராக மாறி வரும் பேருந்து நிழற்குடை

பாபநாசம், ஜன. 8: திருவலஞ்சுழி ஊராட்சி நடுப்படுகையில் திறந்தவெளி பாராக மாறி வரும் பேருந்து நிழற்குடையால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கும்பகோணம் அடுத்த திருவலஞ்சுழி ஊராட்சி நடுப்படுகையில் பேருந்து நிழற்குடை உள்ளது. இந்த பேருந்து நிழற்குடையை அப்பகுதியை சேர்ந்த சில குடிமகன்கள் திறந்தவெளி பாராக மாற்றி வருகின்றனர். இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் பொதுமக்கள் அச்சத்துடன் தான் பேருந்துக்காக நின்று வருகின்றனர். எனவே பேருந்து நிழற்குடையை திறந்தவெளி பாராக மாற்றும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : space ,
× RELATED மனவெளிப் பயணம்