×

பெல் நிறுவன ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருமயம், ஜன.8: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற போவதாக பெல் நிறுவன ஊழியர்கள் தெரிவத்தனர்.நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அனைத்து கட்சி சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள போவதாக கூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது திருமயம் பெல் நிறுவ ஊழியர்களுக்கு குடியிறுப்பு, பள்ளி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்தி கொடுத்திட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது, அன்னிய நேரடி முதலிட்டை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிக வேலை வாய்ப்பை உறுவாக்குவதோடு, தொழிலாளர் நலசட்டங்களை திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.நிரந்தர வேலையில் ஒப்பந்த முறையை புகுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பொது வேலை நிறுத்ததில் பங்கு பெற போவதாக கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Bell ,company employees ,
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...