×

கறம்பக்குடியில் உள்ளாட்சி தேர்தலில் இருதரப்பு மோதல்

கறம்பக்குடி, ஜன.8: கறம்பக்குடியில் தேர்தலின்போது ஏற்பட்ட இரு தரப்பு மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பட்டத்திக்காடு ஊராட்சி உள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பட்டத்திக்காடு தலைவர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த முத்தையா மற்றும் சின்னப்பா உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் சின்னப்பா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில் சின்னப்பா கறம்பக்குடி பகுதிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது, பட்டத்திக்காடு கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் என்ற வெல்லையதேவன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் சின்னையா உறவினர்களை திருமணஞ்சேரி அருகே தகராறு செய்து அவதூறாக பேசி சட்டையை கிழித்து தாக்கினர்.இது குறித்து சின்னப்பா கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் ஸ்டாலின் என்ற வெள்ளையதேவன் மற்றும் அப்பகுதி சேர்ந்த தினேஷ், ஆனந்த், கவுஸ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : clash ,election ,Karambakkudi ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...