×

உள்ளாட்சி தேர்தலில் வென்ற 188 நிர்வாகிகள் பதவி ஏற்பு

அரவக்குறிச்சி, ஜன. 8: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 188 பதவிகளுக்கு பதவியேற்பு விழா நடை பெற்றது. வெற்றி பெற்ற ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உறுதி மொழி எடுத்து கொண்டு பதவியேற்றனர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலருக்கு 1, ஒன்றிய குழு உறுப்பினருக்கு 11, பஞ்சாயத்து தலைவருக்கு 20, பஞ்சாயத்து உறுப்பினருக்கு 156 என அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 188 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று ஊரக உள்ளாட்சிக்கான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றிபெற்ற ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உறுதி மொழி எடுத்து கொண்டு பதவியேற்றனர். இவர்களில் வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றார். 11 ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட மன்றத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்துணவு அலுவலரும் , 20 பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் 156 பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் அந்தந்த ஊராட்சியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் பதவி பிரமாணம் செய்து வைக்க, வெற்றி பெற்ற ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உறுதி மொழி எடுத்து கொண்டு பதவியேற்றனர்.

Tags : executives ,elections ,
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது