×

கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

குளித்தலை, ஜன. 8: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலைக்கு அருகில் உள்ள பிரசித்திபெற்ற புராதன கோயிலான சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசன காட்சி கண் கொள்ளா காட்சியாகும். சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க இயலாதவர்கள் இங்கு வந்து தரிசித்து அதே பலனைப் பெறலாம் என்பது ஐதீகம்.
நிகழ்ச்சி நாள் ஆன 10ம் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மகா அபிசேகமும் மாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடை பெறுகிறது. சிறப்பு நாதஸ்வர கச்சேரிகளும், தேவார திருமுறை இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது. முதல் நாள் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மாணிக்க வாசகர் புறப்பாடும், இரவு 8 மணிக்கு சந்திர சேகர சுவாமி நூறுகால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பிச்சாடன மூர்த்தி நந்தவனம் அழித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராம மூர்த்தி, தக்காரும் உதவி ஆணையருமான சூரியநாராயணன் மற்றும் உபயதாரர்களும், கோயில் பணியாளர்களும் செய்து வருகின்றனர்.

Tags : Arudra Darshan Festival ,Temple ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு