×

சாத்தூரில் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு

சாத்தூர், ஜன. 8: சாத்தூரில் திறந்தவெளியை பொதுமக்கள் பயன்படுத்துவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் வடக்குரத வீதியில் உள்ள அம்மா உணவகம் அருகே காய்கறி மார்க்கெட் மற்றும் திரையரங்கம் உள்ளது. இந்த பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால், அம்மா உணவகம் அருகே உள்ள காலியிடத்தை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் பொதுமக்கள் நலன்கருதி சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sattur ,
× RELATED அரசு நிதியில் முறைகேடு பாஜ ஊராட்சி...