×

அருப்புக்கோட்டையில் புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

அருப்புக்கோட்டை, ஜன. 8: அருப்புக்கோட்டை ஊராட்சி  ஒன்றியத்தில் உள்ள 15 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் திமுக 10, மதிமுக 2, அதிமுக 1, சுயேட்சை 2 என வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் பதவியேற்றனர். தேர்தல் அலுவலர்கள் செல்லப்பா, காமேஸ்வரி ஆகியோர் பதவி பிரமாணம்  செய்து வைத்தனர். மேலும் மூத்த உறுப்பினர் சீனிவாசன் ஒவ்வொரு  கவுன்சிலருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சென்ற பிறகு 1வது  வார்டில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் மகாலட்சுமி கடைசியாக பதவியேற்றுக் கொண்டார். திமுக  தலைவர் ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆகியோரின் வாழ்த்துக்கள்  மற்றும் ஆசியோடு திமுக கவுன்சிலர்கள் பதவியேற்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி நாகமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் பத்மினி, முன்னாள் ஒன்றிய

Tags : councilors ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை