×

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

வத்திராயிருப்பு, ஜன. 8: வத்திராயிருப்பு அருகே கொடிக்குளம் பகுதியில் உள்ள வயல்வௌியில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று முன்தினம் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள தரைமட்ட கிணற்றுக்குள் மாடு தவறி விழுந்தது. இது குறித்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறைக்கு ஆறுமுகம் தகவல் கொடுத்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை சுமார் 5 மணி நேரம் போராடி கயிற்றை கட்டி மீட்டனா்.

Tags : greenhouse ,well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...