×

சிவன் கோயில் ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள் சிவகாசியில் வளரும் சமூக நல்லிணக்கம்

சிவகாசி, ஜன. 8: சிவகாசியில் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் விதமாக, சிவன் கோயில் நந்திபெருமான் ஊர்வலத்துக்கு  சிவகாசி முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் வரவேற்பு அளித்தனர். சிவகாசியில் பழமை வாய்ந்த சிவன்கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரதோச விழாவிற்காக ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி ரிஷப வாகனம் உபயமாக வழங்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி சிவன்கோயில் மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை நந்திபெருமானுக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்று இரவு மண்டபத்தில் இருந்து 10 சமூகத்தினர் சேர்ந்து நந்திபெருமானை எடுத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் சுற்றி வந்தது. அப்போது சிவகாசி முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்தை வரவேற்று கலந்து கொண்டனர். சிவன்கோயில் ஊர்வலத்தில்  முஸ்லிம் சமுதாயத்தினர் கலந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Muslims ,Shiva Temple ,
× RELATED மோடி மீது எடுக்கப்படும் நடவடிக்கை...