×

வீட்டை உடைத்து 15 பவுன் நகை ரூ.35 ஆயிரம் பணம் திருட்டு

சிவகங்கை, ஜன. 8:  சிவகங்கையில் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.35ஆயிரம் பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (51). இவர் வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த டிச.31ம் தேதி தங்கராஜ் குடும்பத்துடன் சென்னை சென்று விட்டு நேற்று அதிகாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.35 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : jewelery ,home ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை