×

இ ந் த நா ள் ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் பூட்டிய வீடுகளை உடைத்து நகை, பணம் திருட்டு

ஆர்.எஸ்.மங்கலம், ஜன. 8: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வரவணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தராஜ் மனைவி பஞ்சவர்ணம் (70). இவர் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது வயலுக்கு களை எடுப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் மதியம் வீடு திரும்பியவர் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பஞ்சவர்ணம் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது,  பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் ரொக்கம் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை  மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சவரணம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் சவேரியார்பட்டிணம் கிராமத்தில் வசிக்கும் கோட்டைச்சாமி என்பவரின் மனைவி கலைச்செல்வி வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை பக்கத்தில் உள்ள சமையல் அறையில் சாவியை வைத்துவிட்டு ரேசன் பொருள் வாங்குவதற்காக சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்துள்ளது. வீட்டில் பீரோவில் இருந்த 1 பவுன் தோடு உள்பட 3 ஜோடி தோடுகள் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொழுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனை கண்ட கலைச்செல்வு ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்களால் இப்பகுதி பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : theft ,jewelery ,area ,RS Mangalam ,houses ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை