திருப்பரங்குன்றம், ஜன.8: திருப்பரங்குன்றம் சவுராஷ்ட்ரா கல்லூரியில் தேர்தல் கல்வியறிவு குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி சவுராஷ்ட்ரா கல்லூரியில் வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இளம் வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக மாணவ, மாணவிகள் அடங்கிய தேர்தல் கல்வியறிவு குழு அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, கவிதை போட்டி மற்றும் கோல்ப் போட்டி ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் நாகராஜன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழஙகினர்.