×

ஒட்டன்சத்திரம் அருகே மரக்கன்று நடும் விழா

ஒட்டன்சத்திரம், ஜன. 8: ஒட்டன்சத்திரம் அடுத்த காளாஞ்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் சதாசிவம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார். பின்னர் மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்தும், அவைகளின் பராமரிப்பு- பயன்பாடு குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், உதவி ஆசிரியை கிருஷ்ணவேணி, மக்கள் நல பணியாளர் கற்பகம் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : planting ceremony ,Ottansatham ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...