மேட்டூர், ஜன.8: மேட்டூர் அருகே நங்கவள்ளி கரட்டுப்பட்டி கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோயில் மஹா யாக வேள்வி பூஜையையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
கரட்டுப்பட்டி சக்தி மாரியம்மன் கோயிலில் மஹா யாக வேள்வி பூஜை மற்றும் மஹா அபிஷேகம் நேற்று நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக பால கணபதி பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் மேட்டூர் காவிரிக்கு சென்று புனிதநீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தாரை தப்பட்டை முழங்க தீர்த்த குட ஊர்வலமானது நங்கவள்ளி பஸ் நிலையம், தேர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மங்கல இசை, வாஸ்து சாந்தி, வடுகபூஜை, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை வெற்றி விநாயகர் பூஜை, மூலமந்திர ஹோமம், காயத்ரி ஹோமம் ஆகியவற்றுடன் சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.