×

செட்டிமாங்குறிச்சி ஊராட்சி தலைவர் நன்றி தெரிவிப்பு

இடைப்பாடி, ஐன.8: இடைப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் செட்டிமாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி போட்டியிட்டு, 2523 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நேற்று செட்டிமாங்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் நல்லதம்பிக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். அதை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் நல்லதம்பி தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியின்போது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்  இடைப்பாடி முருகேசன், பூலாம்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆறுமுகம், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாது, வீரபாண்டி நற்பணிமன்ற செயலாளர் கரிகாலன், ராஜா, வெங்கடேசன், காசி, முருகேசன், குழந்தை கவுண்டன் கண்ணன், சக்திவேல், அய்யந்துரை, பிரபு மற்றும் கூட்டணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Chettimankurichi ,Panchayat Chairman ,President ,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...