×

சித்தூர் ஊராட்சி தலைவர் வீடு, வீடாக சென்று நன்றி அறிவிப்பு

இடைப்பாடி, ஜன.8: இடைப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சித்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் விவசாயி அணி துணை அமைப்பாளர் நாகராஜன் போட்டியிட்டார். இவர் 3438 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் சித்தூர் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று கொண்டார். தொடர்ந்து, சித்தூர்செட்டி தெருவிலிருந்து ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். செல்லாண்டியம்மன், ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு எந்த நேரத்தில் தன்னை அணுகலாம் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திமுக அவைத்தலைவர் நடேசன், விவசாய அணி ஒன்றிய துணை அமைப்பாளர் ஜெயவேல், வக்கீல் முருகேசன், இளைஞரணி துணை செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகுதுரை, குமார், சுரேஷ், தங்கராஜ், ராஜிரெட்டியார் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Chittoor ,panchayat leader ,house ,home ,
× RELATED சித்தூர் லெனின் நகர் காலனியில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து