×

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம், ஜன.8: தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குமாரபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குமாரபாளையத்தில் மதச்சார்பற்ற அணியினர் நகராட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மத்திய -மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால், இளைஞரணி தலைவர் சதீஷ் தனகோபால், சிவக்குமார், முன்னாள் நகரமன்ற தலைவர் சேகர், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், கேசவன், மதிமுக நகர செயலாளர் விஸ்வநாதன், தி.க. சரவணன், முஸ்லிம் லீக் மற்றும் சிறுபான்மையினர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்