×

முத்துகாப்பட்டி பஞ்., தலைவராக அருள்ராஜேஸ் பதவியேற்பு

நாமக்கல், ஜன.8: முத்துகாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக அருள்ராஜேஸ் மற்றும் 12 வார்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள முத்துகாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அருள்ராஜேஸ்(38) வெற்றி பெற்றார். இவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா முத்துகாப்பட்டி ஊராட்சி மன்ற புதிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தலைவராக அருள்ராஜேஸ் பதவியேற்றுக்கொண்டார். மேலும்,12 வார்டு உறுப்பினர்களான  தமிழ்ச்செல்வி, செந்தில், முத்து, சுகுணா, பழனிச்சாமி, வரதராஜ், விமலா, மனோஜ், சுசீலா, ஜெயக்குமார், ராஜேஸ்வரி மற்றும் ராணி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதிய தலைவர் அருள்ராஜேஸ் கூறுகையில்,வரும் 5 ஆண்டுகளில் முத்துகாப்பட்டி ஊராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து மாநிலத்தின் சிறந்த ஊராட்சியாக திகழ பாடுபடுவேன். ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்து அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். புதிய நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Arulrajes ,Muthukapatti Panchayat ,president ,
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...