×

திருவள்ளூரில் 10ம் தேதி நடக்கிறது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர், ஜன. 8: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் தேவையாக இருப்பதால், அப்பணியிடங்களுக்கு வேலை ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, ஐடிஐ, டிகிரி படித்தவர்கள் வரும் 10ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவள்ளுரில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : employment camp ,Tiruvallur ,
× RELATED ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய...