×

பூண்டி நீர்த்தேக்கம் பகுதி கொசஸ்தலை ஆற்றில் மின் மோட்டார் அமைத்து நீர் உறிஞ்சும் விவசாயிகள்

திருவள்ளூர், ஜன. 8: திருவள்ளூர் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் ஆற்றங்கரையோரம் உள்ள விவசாயிகள் பலர் அனுமதியின்றி கிணறு அமைத்து, பம்புசெட் மூலம் தண்ணீர் உறிஞ்சி விவசாய நிலங்களுக்கு பாய்ச்சுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக பூண்டி நீர்த்தேக்கம் அருகிலேயே இதுபோன்ற செயல்கள் நடந்து வருகிறது. இதனால் நிலத்தடிநீர் குறைந்து அருகில் உள்ள கிராம மக்களுக்கு, குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.எனவே, அனுமதி இல்லாமல் ஆற்றுப்படுகையில் மின்மோட்டார் அமைத்து தண்ணீரை உறிஞ்சும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pondi Reservoir Area ,Kosasthalai River ,
× RELATED எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவில்...