×

கும்மிடிப்பூண்டி, சாணாபுத்தூர் கிராமத்தில் தொகுப்பு வீடுகள் வழங்கியதில் மோசடி: கலெக்டரிடம் மக்கள் புகார்

திருவள்ளூர், ஜன. 8: கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சாணாபுத்தூர் கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டரிடம், நேற்று புகார் கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சாணாபுத்தூர் கிராமத்தில் கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டு வரை அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த ஊராட்சியின் செயலர் எஸ்.பிர்லா, ஒன்றிய அதிகாரிகளுடன் சேர்ந்து, அரசு விதிகளை மீறி பயனாளிகளை தேர்வு செய்து தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகுப்பு வீடுகள் கட்டிய நபர்களுக்கே மீண்டும், தொகுப்பு வீடுகள் வழங்கியும், தொகுப்பு வீடுகள் கட்டாமலேயே அதற்கான முழுத்தொகையினை வழங்கியும், பயனாளிகளுக்கு சம்பந்தம் இல்லாத நபர்களுக்கு பணத்தை வழங்கியும், ஆள்மாறாட்டம் செய்தும் ஊழல் செய்து உள்ளனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : package houses ,village ,Collector ,Sanaputhur ,Gummidipoondi ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...