×

ஆவடியில் சிக்னல் கோளாறு மின்சார ரயில் சேவை 2 மணி நேரம் பாதிப்பு

ஆவடி, ஜன. 8: ஆவடி ரயில் நிலையத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் நடுவழியில் நின்றதால்அரக்கோணம் மார்க்கத்தில் சேவை பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து பொறியாளர்கள் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் வந்து 2 மணி நேரம் போராடி கோளாறை சரி செய்தனர்.இதன் காரணமாக அரசு, தனியார் ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags :
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்