×

கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

காஞ்சிபுரம், ஜன.8: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் முதல் வட்டாட்சியர் வரையிலான அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை உள்ளிட்ட துறை சார்ந்த பணிகள் குறித்த புத்தாக்க பயிற்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் கலெக்டர் பொன்னையா பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் கோப்புகள் கையாளும் முறை, பொதுமக்களின் கோரிக்கைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் மற்றும் அலுவலகம் மற்றும் பணி நடைமுறை சார்ந்த பொருள்கள் குறித்து பயிற்சியில் கலந்து கொண்ட அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜூ, சப் கலெக்டர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,office staff ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...