×

இளம்பெண் தற்கொலை ஆர்டிஓ விசாரணை

ஆலந்தூர், ஜன. 8: சென்னை பழவந்தாங்கல் நேரு காலனியை சேர்ந்தவர் வெங்டேசன் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக ரேவதி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ரேவதிக்கு, வயிற்றுவலி அதிகமானதால் துடித்துள்ளார். இதையறிந்ததும், பக்கத்து தெருவில் வசிக்கும் அவரது தாய் அங்கு சென்றார். அப்போது அங்கு ரேவதி, தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். தகவலறிந்து பழவந்தாங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரேவதிக்கு திருமணமாகி 5 ஆண்டே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : RTO ,investigation ,suicide ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு