×

வரும் 10ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்: தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ அறிக்கை

காஞ்சிபுரம், ஜன.8: வரும் 10ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 10ம் தேதி மாலை 4 மணியளவில் குன்றத்தூர் செங்குந்தர் திருமண மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரங்கில் நடைபெற உள்ளது.

மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட துணைச் செயலாளர்கள் வெ.விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகிகின்றனர்.
கூட்டத்தில் ஜனவரி 15ம் தேதி காஞ்சி வடக்கு மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே, திமுக எம்பி, எம்எல்ஏக்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது

Tags : Kanchipuram Northern District DMK Executive Committee Meeting ,
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு