×

சிக்னல் கோளாறு ரயில் சேவை பாதிப்பு

ஆவடி: சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக 4 ரயில் பாதைகள் உள்ளன. இதில், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் பாதைகளும், இரண்டு மின்சார ரயில் பாதைகளும் உள்ளன. இந்த மார்க்கத்தில் 135 மின்சார ரயில் சேவைகளும், 50க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஆவடி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில்கள் சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை ஆங்காங்கே நடுவழியில் நின்றன. இதன் காரணமாக, பயணிகள் நடுவழியில் ரயிலில் காத்துக் கிடந்தனர். தகவலறிந்து பொறியாளர்கள் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேரத்திற்கு மேல் போராடி சிக்னல் கோளாறை சரி செய்தனர். இதன் பிறகு, இந்த மார்க்கத்தில் ஆங்காங்கே நடுவழியில் நின்ற மின்சார ரயில் மெதுவாக இயக்கப்பட்டன. இதன் காரணமாக அரசு, தனியார் ஊழியர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...