×

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 6 பேருக்கு குண்டாஸ்

சென்னை: தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய திருவொற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் 2வது தெருவை சேர்ந்த ராஜேஷ் (எ) டோரி ராஜேஷ் (31), திருட்டு வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் முதல் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ராபர்ட் (21), தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்த கண்ணகி நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான வேளாங்கன்னி (50), தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்த செல்வம் (எ)செல்வகுமார் (36), செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அல்போன்ஸ் (48), கண்ணகி நகரை சேர்ந்த சூர்யா (எ) ஓலை சூர்யா (24) ஆகிய 6 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags : crimes ,series ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக் தொடர்:...