×

கத்தி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை ஐசிஎப், வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை, கத்தி முனையில் வழிப்பறி, செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஐசிஎப் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், ஐசிஎப் ஆடு தொட்டி பகுதியில் 2 பேர், சாலையில் நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், ஐசிஎப் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் நெப்போலியன் (25), முருகன் (25) என்பதும், வில்லிவாக்கம், ஐசிஎப் பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 சவரன் நகை, ஒரு செல்போன், 3 இரு சக்கர வாகனம், 2 அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது