×

முன்விரோத தகராறு: அண்ணன், தங்கை மீது சரமாரி தாக்குதல்

திருக்கோவிலூர், ஜன. 8: திருக்கோவிலூர் அருகே கழுமரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் கோவிந்தராஜ் (40). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கொங்கன் மகன் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஏழுமலையின் உறவினர் பிரேம் என்பவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் போது, கோவிந்தராஜ் தடுத்து நிறுத்தி ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறாய் என கேட்டுள்ளார். ஏற்கனவே உள்ள முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு கொங்கன் மகன் ஏழுமலை, ஆனந்தகுமார் (32), பிரேம் ஆகிய 3 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை தடி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதை அவரது தங்கை சித்ரா தடுத்த போது, அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ், சித்ரா ஆகியோர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கோவிந்தராஜ் மணலூர்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து ஆனந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் தேடிவருகின்றனர்.

Tags : volley attack ,sister ,brother ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...