×

உளுந்தூர்பேட்டையில் கிராம உதவியாளருக்கு நேர்முக தேர்வு

உளுந்தூர்பேட்டை, ஜன. 8: உளுந்தூர்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட மணலூர், பல்லவாடி, பெரியக்குறுக்கை, புல்லூர், ஆரியநத்தம், பா.கிள்ளனூர் ஆகிய கிராமத்தில் காலியாக இருந்த கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த 6 கிராம உதவியாளர் பணிக்கு அந்தந்த கிராமங்களுக்கு உட்பட்ட 225 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

பத்தாம் வகுப்பு கல்வித்தகுதிக்கான இந்த பணிக்கு ஏராளமான பட்டதாரி ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று மணலூர், பல்லவாடி, பெரியகுறுக்கை கிராமத்தை சேர்ந்த 113 பேருக்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. தாசில்தார் காதர்அலி முன்னிலையில் நடைபெற்ற இந்த தேர்வில் கல்வித்தகுதி, எழுத்துத் தேர்வு, சைக்கிள் ஓட்டும் தேர்வு உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இந்த நேர்முக தேர்வின்போது மண்டல துணை வட்டாட்சியர்கள் அருள்மொழி, விஜயா உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். இன்று (9ம் தேதி) புல்லூர், ஆரியநத்தம், பா.கிள்ளனூர் கிராமங்களில் இருந்து விண்ணப்பித்து இருந்த 112 பேரிடம் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.

Tags : Grama Niladhari ,Ulundurpet ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது