×

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை, ஜன. 8: உளுந்தூர்பேட்டை அருகே நகர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வீரபாண்டியன்(26). இவர் கடந்த சில வருடங்களாக இதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து வீரபாண்டியனை அசிங்கமாக திட்டி தாக்கி உள்ளனர். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட வீரபாண்டியன் தனது வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் வீரபாண்டியனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதில் தீவிர சிகிச்சை பலனின்றி வீரபாண்டியன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது அண்ணன் மணிகண்டன்(37) உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை