×

சிதம்பரம் அருகே பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு

சிதம்பரம், ஜன. 8: சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மனைவி சூரியகாந்தி (46). சம்பவத்தன்று இவர் ஒரு பைக்கில் பின்னால்  உட்கார்ந்து சென்றுள்ளார். சிதம்பரம் அருகே உள்ள ஏ. மண்டபம் கிராமத்தின அருகே வந்தபோது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறிய சூரியகாந்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோதண்டபாணி, கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chidambaram ,
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்