×

பேரணாம்பட்டு அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3ம் பருவ பாடப்புத்தகம் விநியோகம்

பேரணாம்பட்டு, ஜன. 7: பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் பருவ விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு 3ம் பருவ தமிழக அரசின் விலையில்லா நோட்டு புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பாடப்புத்தகங்களை தலைமையாசிரியர் திருமலை செல்வி வழங்கினார். அப்போது, ஆசிரியர்கள் ஏகநாதன், ஹரிஹரன், தினகரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Tags : school ,Paranampattu ,
× RELATED தீயணைப்பு துறையினர் அணைத்தனர்...