திருவாரூர், ஜன.7: திருவாரூர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலையில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் இருந்து வரும் பக்தவத்சல பெருமாள் கோயில், புலிவலத்தில் இருந்து வரும் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், மடப்புரம் வெங்கடேச பெருமாள் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.