×

திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் பாபநாசம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பாபநாசம், ஜன. 7: பாபநாசம் அரசு மருத்துவமைன அருகில் உள்ள அண்ணா சிலைக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக பாநாசம் பேரூர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூது, மாவட்டக்குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Winners ,statue garland ,DMK ,Papanasam Anna ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...