×

பூதலூரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் தப்பியோட்டம்

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 7: பூதலூரில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். பூதலூர் கொடும்புரார் நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது போலீசார் வருவதை பார்த்ததும் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு முருகேசன் மற்றும் அன்பு மனைவி மஞ்சுளா இருவரும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து மதுபாட்டில்களை கைப்பற்றி வழக்குப்பதிந்து தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி- செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே சிலர் அனுமதியன்றி மதுபாட்டில்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மதுபாட்டில்களை அலமேலுபுரம் பூண்டி கள்ளர் தெருவை சேர்ந்த வினோத் முருகன் (30) விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து வினோத் முருகனை போலீசார் கைது செய்தனர்.

Tags : persons ,liquor shops ,Poothalur ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...