×

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோயிலில் ெசார்க்கவாசல் திறப்பு

பெரம்பலூர்,ஜன.7: பெரம்ப லூர் மதனகோபால சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் அதிகாலை 5மணியி லிருந்து பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெரம்பலூர் நகரிலுள்ள கு மரகதவள்ளித் தாயார் சமேத மதன கோ பாலசுவாமி திருக்கோயி லில், வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு பரமபத வா சல் திறப்பு எனப்படும் சொ ர்க்கவாசல் திறக்கும் நிகழ் ச்சி நேற்று அதிகாலை வெ கு விமரிசையாக நடைபெ ற்றது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் கடந்த சில தினங்களாக பகல் பத்து நிகழ்ச்சியை முன் னிட்டு பெருமாள் கோயில் வளாகத்தில் அலங்காரத்து டன் சுற்றி வலம் வந்து அரு ள்பாலித்து வந்தார். கடந்த 5ம்தேதிஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மூல வர் மற்றும் உற்சவ மூர்த்தி களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிய ளவில் நாச்சியார் திருக் கோலம் மற்றும் மோகினி அலங்காரத்தில் எழுந்தரு ளி பக்தர்களுக்கு அருள்பா லித்தார்.

இந்நிலையில் நேற்று (6ம் தேதி) திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சொர்க்க வாசல் என்னும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்க ளும் நடைபெற்றன. நிகழ்ச்சியையொட்டி பெருமாளை தரிசிப்பதற்காக அதிகாலை 5 மணியிலிருந்தே குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதன கோபாலசுவாமியை தரிச னம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், தக்காருமான (அரியலூர்) கருணாகரன், செயல் அலுவலர் மணி, ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ர மணியம், செயலா ளர் விவேகானந்தன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மதனகோபால னை தரிசனம் செய்தனர். நேற்றிரவு 7.30 மணி முதல் வெள்ளிக் கருட வாகனத் தில் எழுந்தருளிய பெருமா ள், நகரின் பிரதான சாலைகள் வழியாக வீதியுலா வந்தார்.

Tags : Opening Ceremony ,Perambalur Madanagopalaswamy Temple ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா