×

திருச்செங்கோடு அருகே பஞ்., தலைவியாக 82 வயது மூதாட்டி பதவியேற்பு

திருச்செங்கோடு, ஜன.7:   திருச்செங்கோடு அருகே பஞ்சாயத்து தலைவியாக 82 வயது மூதாட்டி பதவியேற்றுக்கொண்டார். மேலும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருநங்கையும் பொறுப்பேற்றுக்கொண்டார். திருச்செங்கோடு தாலுகா  எலச்சிப்பாளையம் ஒன்றியம் புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 82 வயதான மூதாட்டி நல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஊர் மக்கள திரளாகக் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றிபெற்றார். தமிழகத்தில் முதன்முதலாக திருநங்கை ஒருவர், ஊராட்சி அமைப்புக்கு தேர்வு பெறுவது இதுவே முதல் முறை. ரியா உள்பட 14 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.  மல்லசமுத்திரம்  ஊராட்சி ஒன்றியத்தில் சுயேச்சை உள்பட 9 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 13 பேரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Tags : Panchayat ,Muthatti ,Tiruchengode ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு