×

மார்த்தாண்டம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: வாலிபர் பலி

மார்த்தாண்டம், ஜன. 7:  மார்த்தாண்டம் அருகே பைக்குள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இன்னொரு வாலிபர் படுகாயம் அடைந்தார். மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு நுள்ளிக்காட்டுவிளையை சேர்ந்தவர் பென்ஜமின் மகன் பெனித்(22). நேற்று முன்தினம் மாலை இவர் மார்த்தாண்டத்தில் இருந்து மருதங்கோட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். எதிரே கன்னக்கோடு பகுதியை ேசர்ந்த ரெசின்(20) என்பவர் பைக்கில் மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வெட்டுவெந்நி சந்திப்பு பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக 2 பைக்குகளும் நேருக்குநேர் மோதின. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பெனித்தை குழித்துறை அரசு மருத்துவமனையிலும், ரெசினை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். பின்னர் பெனித் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பெனித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Plaintiff ,Marthandam ,
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு