×

துலுக்கப்பட்டி, அருப்புக்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

அருப்புக்கோட்டை, ஜன. 7: அருப்புக்கோட்டை மின்கோட்டம், முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்திற்குட்பட்ட முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜன.8) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இதேபோல, வேலாயுதபுரம் துணைமின்நிலையத்திற்குட்பட்ட பரமேஸ்வரி மில், வெம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (ஜன.8) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் நிறுத்தப்படும். இதேபோல விருதுநகர் துலுக்கப்பட்டி துணைமின்நிலையத்தில் நானை (ஜன.8) காலை 8 முதல் மாலை 5 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணி நடப்பதால் துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர், முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவடையாபுரம், கோட்டூர், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்காபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூர் ஆகிய ஊர்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

Tags : Aruppukkottai ,area ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...