×

சிவகாசி ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் பதவியேற்றனர்

சிவகாசி, ஜன. 7: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 31 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி, யூனியன் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அலுவலர் தினேஷ்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய கவுன்சிலர்கள், விவேகன்ராஜ், முத்துலட்சுமி, கவிதா, உமாராணி, மீனாட்சிசுந்தரி, ஆழ்வார் ராமானுஜம், ஜெகத்சிங்பிரபு, கணேசன். புளுகம்மாள், சுடர்வள்ளி, ஆரோக்கிய ரீட்டா, நாரணம்மாள் உட்பட 31 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர்கள் சிவக்குமார், வெள்ளைச்சாமி கலந்து கொண்டனர். புதிய கவுன்சிலர்களுக்கு திமுகவினர் மற்றும் அதிமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Councilors ,Sivakasi Panchayat Union ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை