×

நடத்தை விதிகள் விலகியதால் ரேஷன் கார்டிற்கு இனி விண்ணப்பிக்கலாம்

உத்தமபாளையம், ஜன.7: உத்தமபாளையம் தாலுகாவில் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் புதிய ரேஷன்கார்டுகள் விண்ணப்பம், ரேஷன் கார்டில் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்ததால் கடந்த 1 மாதமாக பணிகள் நடக்கவில்லை. ரேஷன் கார்டின் அதிகாரப்பூர்வ வெப்சைட் லாக் செய்யப்பட்டது. புதிய ரேஷன்கார்டுகள் வந்தாலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டுகளுக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன்படி நேரில் சென்று விசாரணை செய்து இதன்பின்பு கார்டுகள் அளிக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ``புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்கான விண்ணப்பித்தல், நீக்கல், சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லாக் விலக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் இனி அப்ளை செய்யலாம்’’ என்றனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்