×

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் பரம பதவாசல் திறப்பு

பழநி, ஜன. 6:  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பழநியில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.  பழநி மேற்கு ரதவீதியில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமள் கோயில் உள்ளது. இக்கோயில்கள் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. வைகுண்ட ஏகாதசி தினமான நேற்று பழநி லக்குமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு கருட வாகனத்தில் தம்பதி சமேதரராக லக்குமி நாராயண பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதேபோல் பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு தம்பதி சமேதரராக அகோபில வரதராஜ பெருமாள், பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு பரமதவாசல் வழியை கடந்து சென்றனர். கோயிலில் புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் சார்பில் பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்ளுக்கு 1 டன் அளவில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், பயறு வகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பழநி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், கட்டிடவியல் வல்லுநர் நேரு, புஷ்ப கைங்கர்ய சபா செயலாளர் மருதசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : temples ,Paramavasal ,Perumal ,Vaikuntha Ekadasi ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு