×

9ம் தேதி முதல் பொங்கல் பரிசு

திருப்பூர், ஜன.7:  திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொது விநியோகத்திட்டத்தின் கீழ்  அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளமுள்ள கரும்புடன் தலா 20 கிராம் திராட்சை, முந்திரி மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகையும் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை வழங்கவும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 நடைமுறையிலுள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதல் இன்றி பொங்கல் பரிசு வழங்கப்படும்.  குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமம் இன்றி, ரேஷன் கடைகளுக்கு சென்று, பொங்கல் பரிசினை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். நெரிசல் ஏற்படும் வண்ணம் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கூட வேண்டாம். அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

Tags :
× RELATED மாநில அளவிலான போட்டிகளில்...