×

தடை செய்யப்பட்ட பல்புகள் பொருத்திய 35 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

கோவை, ஜன.7: கோவை மாநகரில் இரு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட அதிக ஒளி கொண்ட பல்புகள் பொருத்திய 35 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாநகரில் கடந்த வாரம் வாகன சோதனை செய்த போலீசார் தடை செய்யப்பட்ட பல்புகள் பொருத்திய 35 வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதில் வாகன உரிமையாளர்களின் மீது 192வது சட்டப்பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  இதுகுறித்து விசாரித்த கோவை ஜேம்எம் 2, 3, 8, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் கோவை கணபதியை சேர்ந்த செந்தில்முருகன், ரேஸ்கோர்ஸை சேர்ந்த பிரவீன், காட்டூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட மணிவண்ணன், விக்னேஷ், கண்ணப்பன், வினோத் உள்ளிட்ட 35 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது