×

ஒப்பந்ததாரர் கடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் ேபாலீசில் சரண்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (47), பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் காலை சாந்தி காலனியில் நடைபயிற்சி சென்றபோது, காரில் வந்த 4 பேர் இவரை கடத்தி சென்றனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அண்ணாநகர் போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தபோது, கடத்தல் கும்பல், திருமங்கலத்தில் இருப்பது தெரியவந்தது.  அவர்களை மடக்கி பிடித்தபோது, காருக்குள் இருந்த 2 பேர் தப்பினர். 2 பேர் பிடிபட்டனர். காரில் இருந்து  ரவிச்சந்திரனை போலீசார் மீட்டனர்.

விசாரணையில், ரவிச்சந்திரன் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் 70 லட்சம் கடன் பெற்று, அதை திருப்பி தரவில்லை என்றும், இதனால், ஆத்திரமடைந்த ஜெயக்குமார், தனது நண்பர்களான ஜோதிகுமார், தினேஷ், புருஷோத்தமன் ஆகியோருடன் சேர்ந்து ரவிச்சந்திரனை காரில் கடத்தியது தெரிந்தது.பிடிபட்ட புருஷோத்தமன், தினேஷ் ஆகியோரை சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.  இந்நிலையில், தப்பி ஓடிய ஜெயக்குமார், ஜோதிகுமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...