×

தொடர் மழையில் குண்டும், குழியுமாக மாறியது உயிர்பலிக்கு காத்திருக்கும் பொட்டல்புதூர் சாலை

கடையம், ஜன. 3: தொடர் மழையில் கடையம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல்புதூர் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி முஸ்லிம் லீக் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
கடையம் முதல் பொட்டல்புதூர் வரையிலான  சாலை, தொடர் மழைக்கு மிகவும் பழுதடைந்துள்ளது. கடையம் சந்தை பகுதி, முதலியார்பட்டி, காந்தி நகர் பகுதி, திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம் விலக்கு பகுதி, திருமலையப்பபுரம் முதல் பொட்டல்புதூர் கீழ பஸ் நிறுத்தம் வரையிலான சாலை  என அனைத்து பகுதிகளும் குண்டும், குழியுமாகவும், பெரும் பள்ளங்களாகவும் மாறியுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல்லாங்குழிபோல் அடுத்தடுத்து உருவாகியுள்ள பள்ளங்களால் இந்த சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்த செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பிரதான சாலையில் அபாயகரமான குழிகளால், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. பெரும் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் முன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், உடனடியாக இந்த சாலையை சரி செய்ய வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட அமைப்பாளர் முதலியார்பட்டி அப்துல்காதர் கோரிக்கை விடுத்துள்ளார். போர்க்கால அடிப்படையில் சாலையை  சரிசெய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Tags : Pottalbuddur ,road ,pit ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி