×

செங்கோட்டை அருகே சாலையோரம் நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம்

செங்கோட்டை, ஜன. 3: செங்கோட்டை அருகே சாலையோரம் நிறுத்தப்படும் அரசு விரைவு பஸ்களால் விபத்து அபாயம் காணப்படுகிறது.  செங்கோட்டை  அருகே கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த டெப்போவில்  இருந்து குமுளி, திருச்சி, பழநி, திருப்பூர், சத்தியமங்கலம், கோவை, மதுரை, தேனி உட்பட 40 வழித்தடங்களுக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த டெப்போ பஸ்கள், அடிக்கடி கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு அடுத்தடுத்து பஸ்கள் நிற்பதால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் நிகழுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியான நிலையில், நேற்று முன்தினம் கேரள அரசு பஸ்சும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாளரை   முற்றுகையிட்டு சாலையோரங்களில் பஸ்களை நிறுத்தக் கூடாது என வலியுறுத்தினர். இருப்பினும் நேற்றும் மீண்டும் இதே பகுதியில் சாலையோரத்தில் வரிசையாக பஸ்கள் நிறுத்தப்பட்டன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோரத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : accident ,Sengottai ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...